அந்தோ மனமே நம்பாதே
சொந்தமிந்த உடல் என்று மயங்காதே (அ)
இதமானது என்று இயம்பாதே
துன்பக் கடலிது தூங்காதே (அ)
தாமரை மலரிலே அமர்ந்தவன் படைப்பு
உம்மென்று உரைத்தால் உடனே விழும் இரைப்பு
அம்மான் மகன் அவனிடம் அடைந்தால் சிறப்பு
சும்மா இருக்காதே சுருதியினை நன்றாய் நம்பு (அ)
திருச்சிராப்பள்ளியில் தண்டபாணியைக் தரிசிப்பாய்
நிருத்த சிவனின் நெற்றிக்கண்ணில் பிறந்தவன்
கருத்த குழல் கொண்ட வள்ளி மணாளன்
வருத்தம் போக்கும் வா வா வேலன் பாதம் பணிய (அ)