வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகா
உள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ)
ஒரு மலர் எடுத்து உன் பாதம் அளித்திலனே
ஒரு நாழியும் உன் புகழ் பாடி தொழுதிலனே
அருள்சக்தி உடைய அன்பரிடம் சார்ந்திலனே
திருவருள் தாராய் திருவலம் வருகிலனே நான் (உ)
அந்தகன் கை பாசம் பிணைத்திட வருகையில்
சொந்தமாய் வந்தெனை அணைத்திட வருவாயே
தெனத்தெனந்தன எனவோதும் வண்டுகள் சூழ்
மனத்திருப்பரம் குன்றில் வாழ் மயில் நேசா (உ)